Published : 08 Aug 2014 12:00 AM
Last Updated : 08 Aug 2014 12:00 AM
உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் குறித்து தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரக, நகர்ப்புறங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு செப்டம்பர் 18ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுவதாகவும் இதற்கான வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடக்கும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய செயலாளர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் உள்ளாட்சி இடைத் தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில், கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணி முழுமை பெறவில்லை என்பது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு வந்தது. இதன் காரணமாக, தேர்தல் பற்றிய அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய தேர்தல் அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT