Published : 25 Aug 2014 03:24 PM
Last Updated : 25 Aug 2014 03:24 PM

டெல்லி கன்னோட் பகுதியில் தீ விபத்து: பல மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் தீ அணைப்பு

புதுடெல்லியின் பெரும் வணிக மையமான கன்னோட் பகுதியிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன.

இதுகுறித்து துணை முதன்மை தீயணைப்பு அதிகாரி விபின் கின்டல் கூறுகையில், “அந்த கட்டடத்தின் இரண்டாவது மாடியில், உடற்பயிற்சி மையம் ஒன்று உள்ளது. அங்குள்ளவர்கள் அப்பகுதியிலிருந்து புகை வெளிவருவதை கண்டு, தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்தில் ஏற்பட்ட தீயை கட்டுபடுத்த 15 வாகனங்கள் விரைந்தன. தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவரை, உயிரிழப்பு எதுவும் இல்லை”, என்று தெரிவித்தார். விபத்து நிகழ்ந்ததற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x