Published : 21 Aug 2014 11:10 AM
Last Updated : 21 Aug 2014 11:10 AM
அசாம் - நாகாலாந்து மாநிலங்களின் எல்லையில் நிகழ்ந்து வரும் கல வரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை அனுப்பியுள்ளது.
அசாம் மாநில எல்லையில் உள்ள கோலாகாட் மாவட்டத்தின் உரியாம்காட் பகுதியில் உள்ள கிராமத்தினர் மீது நாகாலாந்தைச் சேர்ந்தவர்கள் கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த கலவரத்தில் 9 பேர் கொல்லப்பட்டனர். 10 ஆயிரம் பேர், தங்களின் வீடுகளிலிருந்து வெளியேறி அரசு அமைத்துள்ள நிவாரண முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர். பாதுகாப்புப் பணியில் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கலவரத்தைத் தடுக்க மத்திய ரிசர்வ் போலீஸ் படை துரிதமாக செயல்படவில்லை என்றும், பாதுகாப்பு வழங்கும் விஷ யத்தில் அந்த படையின் செயல்பாடு மோசமாக இருப்பதாகவும் அசாம் மாநில முதல்வர் தருண் கோகோய் குற்றம் சாட்டியுள்ளார்.
இதை மறுத்துள்ள மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “தருண் கோகோயின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது” என்று தெரிவித் தார்.
இதனிடையே மக்களை காக்க பாதுகாப்புப் படையினர் தவறிவிட்டதாகக் கூறி, கோலாகாட் பகுதியில் நூற்றுக்கணக்கானோர் கடந்த செவ்வாய்க்கிழமை போராட் டம் நடத்தினர்.
பிரச்சினைக்கு தீர்வு காண அசாம், நாகாலாந்து மாநிலங்களின் முதல் வர்கள் இன்று (வியாழக்கிழமை) நேரில் சந்தித்துப் பேச்சு நடத்த வுள்ளனர்.
பிரதமரிடம் அறிக்கை
அசாம் நாகாலாந்து எல்லையில் நிகழ்ந்து வரும் கலவரம் குறித்தும், அது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை அனுப்பி வைக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் பிரதம ரின் முதன்மைச் செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா கேட்டிருந்தார்.
பிரதமர் அலுவலகத்திடமிருந்து தகவல் வந்த சில மணி நேரங்களி லேயே, கலவரம் தொடர்பான அறிக்கையை அனுப்பிவைத்துவிட்ட தாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT