Last Updated : 11 Oct, 2018 01:28 PM

 

Published : 11 Oct 2018 01:28 PM
Last Updated : 11 Oct 2018 01:28 PM

காஷ்மீர் என்கவுன்ட்டர்: முனைவர் படிப்புக்கு விண்ணப்பித்தவர் உட்பட மூன்று தீவிரவாதிகள் சிக்கினர்

வடக்கு காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் நடைபெற்ற என்கவுன்ட்டர் தாக்குதலில் முனைவர் படிப்புக்கு விண்ணப்பித்த மனான் வானி உட்பட மூன்று தீவிரவாதிகள் சிக்கியுள்ளனர்.

வானி உட்பட மூன்று தீவிரவாதிகள் ஹந்த்வாரா பகுதியின் சத்குண்ட் கிராமத்தில் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர்.

இதைத் தொடர்ந்து அதிகாலையில் இருந்து அப்பகுதியில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதனிடையே தேடுதல் வேட்டையைத் தொடங்க சிறிது நேரம் தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

அப்போது தீவிரவாதிகளைச் சரண் அடையக் கூறி, போலீஸார் தொடர்ந்து அழைப்பு விடுத்தனர். ஆனால் முயற்சி ஏதும் பதிலளிக்காததால், தாக்குதல் தொடர்ந்தது.இதில் வானி உட்படத் தீவிரவாதிகள் தப்பிச் செல்ல முடியாதபடி சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் முனைவர் படிப்புக்காக விண்ணப்பித்த மனான் வானி, கடந்த ஜனவரி மாதம் தீவிரவாத அமைப்பில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x