Published : 13 Oct 2018 01:40 PM
Last Updated : 13 Oct 2018 01:40 PM
மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது அமெரிக்காவைச் சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் ஒருவம் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பிரியா ரமணி மற்றும் மற்றொரு பத்திரிகையாளரும் புகார் தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ஏறக்குறைய 40 ஆண்டு கால பத்திரிகை அனுபவம் கொண்டவர். பல்வேறு பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றியவர். அவர் தன்னுடைய பதவிக் காலத்தில் இந்த இரு பெண் பத்திரிகையாளர்களிடம் தவறாக நடந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வேறு சில பெண்களும் எம்.ஜே அக்பருக்கு எதிராகப் புகார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் மத்திய அரசுக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அக்பர் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்தநிலையில் எம்.ஜே. அக்பர் மீது அமெரிக்க பெண் பத்திரிக்கையாளர் ஒருவரும் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த சிஎன்என் பத்திரிக்கையாளரான மஜ்லி டி புயு காம்ப் என்பவர் இந்த புகாரை கூறியுள்ளார்.
அவர் 18 வயதாக இருந்தபோது அக்பரின் கீழ் பணியாற்றியதாகவும் அப்போது அவர் தன்னடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்த அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘எனது நன்றியை தெரிவிப்பதற்காக அவருக்கு கையை நீட்டினேன். ஆனால் 55 வயதான அவர் தனது நாக்கை, 18 வயதான எனது வாயில் வைத்து முத்தமிட்டு விட்டார்’’ எனக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT