Published : 26 Oct 2018 01:24 PM
Last Updated : 26 Oct 2018 01:24 PM

வெளிநாட்டு நன்கொடையில் விதிமீறல்?- பெங்களூரு ஆம்னெஸ்டி இந்தியா அலுவலகத்தில் ரெய்டு

வெளிநாட்டில் இருந்து பெறப்பட்ட நன்கொடையில் விதிமீறல் செய்யப்பட்டதாகக் கூறி பெங்களூருவில் உள்ள ஆம்னெஸ்டி இந்தியா அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.

பெங்களூரு அலுவலகத்தில் வியாழக்கிழமை மதியம் 2 மணிக்குத் தொடங்கிய சோதனை நள்ளிரவு வரை நடைபெற்றது.

உள்துறை அமைச்சகத்தின் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டப் பிரிவு அளித்த தகவலின்படி இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அமலாக்கத் துறை,'' கடந்த 2011- 12-ம் ஆண்டில் ஆம்னெஸ்டி இண்டர்னேஷல் இந்தியா, அதன் பிரிட்டன் அலுவலகத்தில் இருந்து வெளிநாட்டு நிதியைப் பெற அனுமதி கோரியது.

வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் இதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் பாதுகாப்பு நிறுவனங்களின் எச்சரிக்கையை அடுத்து, நிதியுதவி கோரும் பெரும்பாலான ஆவணங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து ஆம்னெஸ்டி இண்டர்னேஷனல் இந்தியா பிரைவேட் லிமிட்டட் என்ற பெயரில் இன்றைய தேதி வரை ரூ.36 கோடி பெறப்பட்டுள்ளது. இந்தத் தொகையைப் பெற்றதில் சட்ட விதிமுறைகள் உள்ளதால் சோதனை நடத்தப்பட்டது'' என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x