Published : 06 Oct 2018 08:30 AM
Last Updated : 06 Oct 2018 08:30 AM
சபரிமலை கோயிலில் வழிபட பெண்களை அனுமதிக்கலாம் என்று கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து தீர்ப்பை அமல்படுத்துவதாக கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு உறுதியளித்தது. இதையடுத்து பெண்கள் வழிபட ஏதுவாக பல்வேறு ஏற்பாடுகளை அங்கு அரசு செய்து வருகிறது.
இந்த நிலையில் இதை எதிர்த்து காங்கிரஸார் நேற்று ஆர்ப்பாட் டத்தை நடத்தினர். போராட்டத் தைத் தொடங்கி் வைத்து கேரள சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ரமேஷ் சென்னிதாலா பேசியதாவது: இந்து மக்களை கேரளா அரசு, ஆர்எஸ்எஸ் - பாஜகவினர் ஆகியோர் ஏமாற்றி வருகின்றனர்.
சபரிமலையை போர்க்கள மாக்கக் கூடாது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவசர அவசரமாக அமல்படுத்துவதற்கு கேரளா அரசு ஏன் முற்படுகிறது என்று தெரிய வில்லை. ஏராளமான நீதிமன்றத் தீர்ப்புகள் இன்னும் அமல் செய்யப்படாமல் உள்ளன. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்யவேண்டும்.
மேலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தாமல் இருக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கோடியேறி பால கிருஷ்ணன் கட்சிப் பத்திரிகையான தேசாபிமானியில் கூறும்போது, “சபரிமலை கோயிலில் பெண்கள் 2-ம் தர குடிமக்களாக நடத்தப் பட்டு வந்தனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் அது முடிவுக்கு வந் துள்ளது. அந்தத் தீர்ப்பைத்தான் பினராயி விஜயன் தலைமையிலான அரசு செய்யவுள்ளது” என்றார்.
கேரள டிஜிபி லோக்நாத் பெஹரா கூறும்போது, “சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண் போலீஸார் பணியமர்த்தப்படுவர். மேலும் பெண் போலீஸாரை பாதுகாப்புப் பணிக்கு அனுப்புமாறு தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள் ளோம்” என்றார். -
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT