Published : 23 Aug 2018 09:45 AM
Last Updated : 23 Aug 2018 09:45 AM

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 2 போலீஸார் சுட்டுக்கொலை: பாஜக தொண்டர் ஒருவரும் பலி

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குல் கம் மாவட்டம் ஜாஜ்ரிபோரா கிராமத்தில் நேற்று பக்ரீத் தின சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது. பண்டிகையையொட்டி ஜம்மு-காஷ்மீர் மாநில போலீஸ் படைக்கு சிறப்பு போலீஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டிருந்த ஷா (34) குல்கமிலுள்ள தனது வீட்டுக்கு வந்திருந்தார்.

ஷாவின் வீட்டுக்கு அருகே நேற்று அவரை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். ஏராளமான குண்டுகள் அவர் உடம் பில் பாய்ந்து அதே இடத்திலேயே அவர் இறந்தார். அவருக்கு மனைவி, 2 மகள்கள், தாயார் உள்ளனர்.

பின்னர் அவரது உடல் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப் பட்டது. பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் மாவட்ட போலீஸ் அலு வலகத்தில் அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. ஷா கொல்லப் பட்ட சம்பவத்துக்கு மாநில போலீஸ் டிஜிபி எஸ்.பி.வைத் கடும் கண்டனம் தெரிவித்தார்.

புலவாமா மாவட்டத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில் போலீஸ் அதிகாரி முகமது யாகூப் ஷா, தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப் பட்டார்.

இதேபோல வட காஷ்மீரிலுள்ள குப்வாரா மாவட்ட பாஜக தொண் டர் ஷப்பீர் அகமது பட் நேற்று தீவிர வாதிகளால் சுட்டுக் கொல்லப் பட்டார். நேற்று முன்தினம் இரவு அவரைக் கடத்திச் சென்ற தீவிரவாதிகள் அவரைக் கொன்று உடலை ராக்-இ-லிட்டர் பகுதியில் போட்டு விட்டுச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் ட்விட்டரில் கூறியுள்ளதாவது: பாஜக தொண்டர் ஷப்பீர் அகமது பட், தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தீவிரவாதிகளின் கோழைத் தனமான செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x