கல்யாண ஊர்வலத்தில் அதிக சத்தத்தால் 140 கோழிகள் உயிரிழப்பு: உ.பி. ஒலி பெருக்கி உரிமையாளர் கைது

கல்யாண ஊர்வலத்தில் அதிக சத்தத்தால் 140 கோழிகள் உயிரிழப்பு: உ.பி. ஒலி பெருக்கி உரிமையாளர் கைது
Updated on
1 min read

சுல்தான்பூர்: உத்தர பிரதேசத்தில் அதிக சத்​தம் காரணமாக 140 கோழிகள் உயி​ரிழந்​தன. இதுதொடர்​பாக ஒலி பெருக்கி உரிமை​யாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேசம் சுல்​தான்​பூரில் கடந்த 25-ம் தேதி திருமண ஊர்​வலம் நடை​பெற்​றது. அப்​போது ஒலிபெருக்​கி​யில் அதிக சத்​தத்​துடன் பாடல் ஒலிக்​கப்​பட்​டுள்​ளது. அப்​போது அரு​கில் உள்ள கோழிப் பண்ணை ஒன்​றில் சில கோழிகள் அதிர்ச்​சி​யில் இறந்​துள்​ளன. இதையடுத்து கோழிப் பண்ணை உரிமை​யாளர் முகமது சபிர், ஒலி பெருக்கி (டி.ஜே) உரிமை​யாளரிடம் சத்​தத்தை குறைக்​கும்​படி கூறி​யுள்​ளார். ஆனால், அவர் கண்​டு​கொள்​ள​வில்​லை. கோழிப்​பண்ணை ஊழியரிடம் 3 முறை வேண்​டு​கோள் விடுத்​தும், பலன் இல்​லை.

ஒலிபெருக்​கி​யின் சத்​தத்​தால் ஏற்​பட்ட அதிர்ச்​சி​யில் கோழிப் பண்​ணை​யில் இருந்த 140 கோழிகள் உயி​ரிழந்​தன. இதனால் போலீஸ் கட்​டுப்​பாட்டு அறையை தொடர்பு கொண்டு முகமது சபிர் புகார் தெரி​வித்​தார்.

போலீ​ஸார் வந்​ததும் இழந்த கோழிகளுக்கு இழப்​பீடு தரு​வ​தாக டி.ஜே. உரிமை​யாளர் கூறி​னார். போலீ​ஸார் சென்​றதும் அவர் தப்​பிச் சென்​று​விட்​டார். இறந்த கோழிகளைப் பரிசோதனைக்கு அனுப்​பிய​தில், அதிக சத்​தத்​தால் ஏற்​பட்ட அதிர்ச்​சி​யில் இதய செயலிழப்பு ஏற்​பட்டு கோழிகள் இறந்​த​தாக உடற்​கூறு ஆய்வு அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டது.

இதுகுறித்து போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து டி.ஜே. உரிமையாளரை கைது செய்து அவரது டி.ஜே. வாக​னத்​தை​யும் பறி​முதல் செய்​தனர். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

கல்யாண ஊர்வலத்தில் அதிக சத்தத்தால் 140 கோழிகள் உயிரிழப்பு: உ.பி. ஒலி பெருக்கி உரிமையாளர் கைது
பேரிடர் தகவல் அமைப்பு பரிசோதனை: நாடு முழுவதும் போன்களில் ஒலித்த ‘பீப்' சத்தம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in