Published : 28 Aug 2018 08:33 AM
Last Updated : 28 Aug 2018 08:33 AM
இந்த ஆண்டில் மழை, வெள்ளம் போன்ற நிகழ்வுகளுக்கு இது வரை 1,276 பேர் பலியாகி யுள்ளனர்.
இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பருவமழை தீவிரம் அடைந்த தால் உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா, கேரளா 8 மாநிலங்களில் பெரிய அளவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
கேரளாவைப் பொருத்தவரை, கடந்த ஜூலை மாதம் முதல் பெய்த மழைக்கு இதுவரை 443 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் 218 பேர் நிகழாண்டு மழை வெள்ளத்துக்கு பலியாகியுள்ளனர். இதேபோல், மேற்கு வங்கத்தில் 198, கர்நாடகா வில் 166, மகாராஷ்ட்ராவில் 139, குஜராத்தில் 52, அசாமில் 49, நாகலாந்தில் 11 என மொத்தம் 1,276 பேர் மழை, வெள்ளத்துக்கு உயிரிழந்திருக்கின்றனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT