Published : 22 Aug 2018 09:55 AM
Last Updated : 22 Aug 2018 09:55 AM

காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா-பாக். பேச்சு நடத்த வேண்டும்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வலியுறுத்தல்

காஷ்மீர் பிரச்சினை உட்பட எல்லா பிரச்சினைகளையும் இந்தி யாவும் பாகிஸ்தானும் பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று பாகிஸ் தான் பிரதமர் இம்ரான் கான் கூறி யுள்ளார்.

இஸ்லாமாபாத்தில் கடந்த வாரம் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து கலந்து கொண்டார். அப்போது, அந்நாட்டு ராணுவ தளபதி காமர் ஜாவேத் பஜ்வாவை சித்து கட்டியணைத்துக் கொண்டார். இது இந்தியாவில் கடும் விமர்சனத்துக்குள்ளானது. இதுபற்றி இம்ரான் கான் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப் பதாவது:

அமைதியின் தூதுவராக வந்த சித்து மீது பாகிஸ்தான் மக்கள் அன்பைக் காட்டினர். இதற்காக சித்துவை விமர்சிப்பவர்கள் அமை திக்கு எதிரானவர்கள். அமைதி இல்லாமல் மக்கள் முன்னேற முடியாது. காஷ்மீர் பிரச்சினை உட் பட எல்லா பிரச்சினைகளையும் இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும். வறுமையை ஒழிக்கவும் மக்கள் முன்னேற்றம் அடையவும் பிரச்சினைகளுக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு கண்டு வர்த்தகத்தை தொடங்க வேண்டும்.

இவ்வாறு இம்ரான் கான் கூறியுள்ளார். இதனிடையே சண்டி கரில் சித்து அளித்த பேட்டியில், ‘‘பாகிஸ்தான் ராணுவ தளபதி காமர் ஜாவேத் பஜ்வா என்னிடம், குரு நானக் ஜெயந்தியை முன்னிட்டு இந்தியாவில் உள்ள சீக்கிய புனித தலமான தேரா பாபா நானக்கில் இருந்து பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் சாஹிப் தலத்துக்கு பாதையை திறப்பதற்கான முயற் சியில் ஈடுபட்டு வருவதாக கூறினார். உடனே, உணர்ச்சிப் பெருக்கில் அவரை கட்டியணைத் துக் கொண்டேன். இதில் உள்நோக் கம் இல்லை.இந்தியாவும் பாகிஸ் தானும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x