Published : 30 Aug 2018 08:37 AM
Last Updated : 30 Aug 2018 08:37 AM
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகத்துக்கு 2016-17-ம் ஆண்டில் 12,787 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் பல்வேறு தகவல்கள் பற்றிய விவரங்கள் கேட்டு பிரதமர் அலுவலகத்துக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங் கள் வரும். இதில் 2016-17-ம் ஆண்டில் 12,787 விண்ணப்பங்கள் வந்துள்ளன. கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து பிரதமர் அலுவலகத்துக்கு வந்த ஆர்டிஐ விண்ணப்பங்களில் இதுவே அதிகபட்சமாகும்.
2015-16-ம் ஆண்டில் 11,138 ஆர்டிஐ விண்ணப்பங்களும் 2014-15-ல் 12, 674, 2013-14-ல் 7,077, 2012-13-ல் 5,828 விண்ணப் பங்களும் வந்துள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களைக் கோரி ஆர்டிஐ சட்டத்தின்கீழ் பிடிஐ செய்தி நிறுவன செய்தியாளர் பிரதமர் அலுவலகத்துக்கு விண்ணப்பித் திருந்தார். அவருக்கு பிரதமர் அலுவலகம் அளித்த பதிலில் இந்த விவரங்கள் தெரிவிக்கப் பட்டுள்ளன. மேலும் 2016-17-ம் ஆண்டில் 1,306 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT