Published : 27 Aug 2018 06:02 PM
Last Updated : 27 Aug 2018 06:02 PM

அசாம் பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற ஆயுள் தண்டனைக் கைதி

அசாமில் ஆயுள் தண்டனைக் கைதியொருவர், திறந்தவெளி பல்கலைக்கழகம் நடத்திய 12-ம் வகுப்புக்கு இணையான பொதுத்தேர்வில் முதலிடம் பெற்றுள்ளார்.

வட மத்திய அசாமின் மாவட்ட சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக உள்ளவர் அருப்ஜோதி தேகா. 32 வயதான இவர், கொலை செய்ததற்காக சிறையில் உள்ளார். தேகா, கிருஷ்ண காந்த ஹேண்டிகி மாநிலத் திறந்த வெளிப் பல்கலைக் கழகம் நடத்திய மாநில அளவிலான தேர்வில் 80.33% பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

2012 முதல் சிறையில் இருக்கும் தேகா, சிறையின் நூலகராகப் பணியாற்றி வருகிறார்.

இவருடன் சக கைதிகளான துருபஜோதி ஹசாரிகா 73% மதிப்பெண்கள் மற்றும் இலியாஸ் பூர்ட்டி 71% மதிப்பெண்கள் பெற்று முறையே 6-வது மற்றும் 10-வது இடங்களைப் பிடித்துள்ளனர்.

இதுகுறித்து தேகா கூறும்போது, ''சிறையில் சூழ்நிலை சிறப்பாக இருப்பதால் மணிக்கணக்கில் படிக்க முடிகிறது. அத்துடன் எங்களின் திறமைகளைக் கூர்தீட்டிக்கொள்ளவும் முடிகிறது'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x