Published : 13 Aug 2018 07:52 AM
Last Updated : 13 Aug 2018 07:52 AM
சிறுமிகளை பலாத்காரம் செய் வோருக்கு தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்ட (திருத்த) மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கி உள்ளார்.
காஷ்மீரின் கதுவாவில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய் யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர் வலையை ஏற்படுத்தியது. இதை யடுத்து, சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்தை கடந்த ஏப்ரல் 21-ம் தேதி மத்திய அரசு பிறப்பித்தது.
அந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக, குற்றவியல் சட்ட (திருத்த) மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கினார்.
இந்த சட்டத்தின்படி, 12 வயதுக் குட்பட்ட சிறுமிகளை பலாத் காரம் செய்பவர்களுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் அதிகபட்ச மாக மரண தண்டனையும் விதிக் கலாம். கூட்டு பலாத்காரம் செய்தால், குற்றவாளிகளை வாழ் நாள் முழுவதும் சிறையில் அடைக்கலாம்.
16 வயதுக்குட்பட்ட சிறுமி களை பலாத்காரம் செய்தால் குறைந்தபட்ச தண்டனை 10 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டு களாக உயர்த்தப்படுகிறது, குற்றத்தின் அடிப்படையில் வாழ் நாள் சிறையாகவும் மாற்றப்படும். கூட்டு பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்க முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT