Published : 22 Aug 2014 09:36 AM
Last Updated : 22 Aug 2014 09:36 AM
தெலங்கானா மாநில அரசின் சட்டம் ஒழுங்கு தொடர்பான அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா ராஷ்டிர சமிதி எம்.பி.க்கள் பிரதிநிதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத் தினார். அக்கூட்டத்துக்குப் பிறகு ராஜ்நாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தெலங்கானா முதல்வரின் அதிகார வரம்பில் மத்திய அரசு தலையிடவில்லை; மீறவில்லை. ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தை மட்டுமே அமல்படுத்தியது. அச்சட்டத்தை மட்டுமே தீவிரமாக செயல்படுத்துகிறோம். தேசத்தின் மத்தியக் கட்டுமானத்தை பாதிக்கும் வகையில் மத்திய அரசு எந்த செயலிலும் ஈடுபடாது என்றார்.
தெலங்கானா ராஷ்டிர சமிதி எம்.பி. கே. கவிதா கூறும்போது, “மத்திய உள்துறை அமைச் சருடனான சந்திப்பு பயனுள்ள தாகவும், சாதகமானதாகவும் இருந்தது. ஹைதராபாத் தெலங்கானாவின் தலைநகரம் தான். பகிர்ந்து கொள்ளப்பட்ட தலைநகரம் அல்ல. ஆகவே, மாநில அரசின் சட்டம் ஒழுங்கு சார்ந்த அதிகாரம் மாநில அரசின் வசமே இருக்கும்” என்றார்.
ஹைதராபாத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான விவகாரங்களுக்கு மாநில ஆளுநருக்கு கூடுதல் அதிகாரங்களை மத்திய அரசு அளித்துள்ளது. இதற்கு தெலங்கானா அரசு எதிர்ப்பு தெரவித்து வருகிறது. ஆந்திரம், தெலங்கானா இருமாநிலங் களுக்கும் பொதுவான தலை நகராக ஹைதராபாத் இருந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT