Last Updated : 19 Aug, 2018 02:13 PM

 

Published : 19 Aug 2018 02:13 PM
Last Updated : 19 Aug 2018 02:13 PM

கேரளாவுக்கு உதவி: தாகத்தைத் தணிக்க சிறப்பு ரயில் மூலம் 14 லட்சம் லிட்டர் குடிநீர் அனுப்பிய மத்திய ரயில்வே

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய ரயில்வே 14 லட்சம் லிட்டர் குடிதண்ணீர் வழங்கியுள்ளது.

இதுகுறித்து புனே கோட்ட ரயில்வே மேலாளர் மிலிந்த் தியோஸ்கர் தெரிவித்தது:

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான கேரள மக்கள் குடிநீரின்றி தவித்து வருகிறார்கள். இவர்களுக்கு உதவுவதற்காக 14 லட்சம் லிட்டர் குடிநீரை இன்று சிறப்பு ரயில் மூலம் அனுப்பிவைத்தோம்.

சிறப்பு ரயிலில் 7 லட்சம் லிட்டர் குடிநீர் அடங்கிய 14 வேகன்கள் புனேவிலிருந்தும், 7.5 லிட்டர் கொள்ளவு கொண்ட 15 வேகன்கள் ரட்லாமிலிருந்தும் அனுப்பிவைக்கப்படுகிறது.

இந்த சிறப்பு குடிநீர் ரயில் தயாந்த், வாடி மற்றும் ரேனிகுண்டா வழியாக கேரளாவின் காயம்குளத்திற்கு சென்றடையும் என்று ரயில்வே மேலாளர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x