Published : 29 Aug 2014 01:02 PM
Last Updated : 29 Aug 2014 01:02 PM
வளர்ச்சியை ஏற்படுத்தும் தொழில்நுட்பத்தால் அழிவையும் ஏற்படுத்த முடியும். தொழில்நுட்பம் சார்ந்த குற்றங்களை தடுக்க அதே வேகத்திற்கு சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
'போர்னோ' வெப்சைட்டுகளை தடை செய்வது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்கும் இணையதளங்கள் மற்றும் ஆபாச இணையதளங்களை தடை செய்ய கோரி சமூகசேவை அமைப்பு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில்: இந்தியாவில் 4 கோடி 'போர்னோ' வெப்சைட்டுகள் இயங்குகின்றன. அவற்றை தடை செய்ய தங்களால் முடியவில்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இணையதள சேவை வழங்குபவர்களை இத்தகைய போனோ வெப்சைட்டுகளை தடை செய்யுமாறு உத்தரவிட முடியாது. அதனால், சமூகவலைதள நிறுவனங்களை இந்தியாவில் சர்வர்கள் அமைக்குமாறு வலியுறுத்தி வருகிறோம்.
இதன்மூலம், போர்னோ வெப்சைட்டுகளை தடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றம் கண்டிப்பு:
சட்டம், தொழில்நுட்பத்தைவிட வேகமாக இருக்க வேண்டும். சட்டங்கள் இயற்றப்படுவது மட்டுமல்லாமல் அவை உடனுக்குடன் நடைமுறைப் படுத்தப்படுகின்றன என்பதை நிரூபிக்கும் நேரம் வந்துவிட்டது. வளர்ச்சியை ஏற்படுத்தும் தொழில்நுட்பத்தால் அழிவையும் ஏற்படுத்த முடியும்.
போர்னோ வெப்சைட்டுகளை தடை செய்ய சட்டம், தொழில்நுட்பம், அரசின் கண்காணிப்பு ஆகியன இணைந்து செயல்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT