Published : 05 May 2025 05:52 AM
Last Updated : 05 May 2025 05:52 AM

காஷ்மீர் போலீஸுக்கும், நாட்டுக்கும் சேவையாற்றவே பிறந்துள்ளேன்: ஸ்ரீ நகரில் பணியாற்றும் போலீஸ் அதிகாரி உருக்கம்

இப்த்​கார் அலி

புதுடெல்லி: ஜம்​மு-​காஷ்மீர் போலீஸுக்​கும், நாட்​டுக்​கும் சேவை​யாற்​றவே பிறந்​துள்​ளேன் என்று ஸ்ரீநகரில் பணி​யாற்​றும் போலீஸ் அதி​காரி உருக்​க​மாகத் தெரி​வித்​துள்​ளார். ஜம்​மு-​காஷ்மீரைச் சேர்ந்​தவர் இப்த்​கார் அலி (45). இவர் ஜம்​மு-​காஷ்மீர் போலீ​ஸில் பணி​யாற்றி வரு​கிறார்.

பஹல்​காம் தாக்​குதலுக்​குப் பிறகு இந்​தி​யா​வில் தங்​கி​யுள்ள பாகிஸ்​தானியர்​களை வெளி​யேற்ற இந்​திய அரசு உத்​தர​விட்​டது. இதைத் தொடர்ந்து ஜம்​மு-​காஷ்மீரின் பூஞ்ச், ரஜவுரி, ஜம்மு மாவட்​டங்​களைச் சேர்ந்த 24 பேரை வெளி​யேற்ற ஜம்​மு-​காஷ்மீர் அரசு உத்​தர​விட்​டது. இதில் இப்​த்கார் அலி மற்​றும் அவரது குடும்​பத்​தா​ரும் அடங்​கு​வர். இதையடுத்து அவர்​கள் பஞ்​சாப் எல்​லைக்கு அழைத்​துச் செல்​லப்​பட்​டனர்.

இந்​நிலை​யில் ஜம்​மு-​காஷ்மீர் மற்​றும் லடாக் உயர் நீதி​மன்​றத்​தில் அலி தரப்​பில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இதையடுத்து மனுவை விசா​ரித்த நீதி​மன்​றம் இப்த்​கார் அலி, அவரது குடும்​பத்​தாரை பாகிஸ்​தானுக்கு அனுப்​பவேண்​டாம் என்று உத்​தர​விட்​டது. இதுகுறித்து இப்​கார் அலி கூறிய​தாவது: நானும், என்​னுடைய குடும்​பத்​தைச் சேர்ந்த 8 பேரும், பாகிஸ்​தானைச் சேர்ந்​தவர்​கள் என்று கூறி எங்​களை பஞ்​சாப் எல்​லைக்கு அழைத்​துச் சென்​று​விட்​டனர். நான் நீதி​மன்​றத்தை அணுகி எங்​களுக்​குச் சாதக​மான உத்​தரவை பெற்​றோம்.

என்​னுடைய பெற்​றோர் பகுர் தின், பாத்​திமா பீ ஆகியோர் பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீர் பகு​திக்கு 1965-ம் ஆண்டு நடந்த போரின் போது சென்​றனர். அங்கு 18 ஆண்​டு​கள் அகதி​கள் முகாமில் இருந்த பின்​னர் 1983-ல் மீண்​டும் பூஞ்ச் மாவட்​டத்​துக்​குத் திரும்​பினர். எங்​களை ஜம்​மு-​காஷ்மீர் அரசு, நிரந்தர இந்​தி​ய​வாசிகளை அனு​ம​தித்து சான்​றிதழ் வழங்​கி​யுள்​ளது. ஆனால், இந்​திய குடிமக்​களாக மத்​திய அரசு அங்​கீகரிக்​க​வில்​லை.

எங்​களுக்கு சொந்​த​மான நிலத்​தை, எங்​களது தாய்​மாமன் அபகரித்​துக் கொண்​டுள்​ளார். இதுதொடர்​பான வழக்கு நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்​ளது. ஜம்​மு-​காஷ்மீர் போலீஸுக்​கும், நாட்​டுக்​கும் சேவை​யாற்​றவே பிறந்​துள்​ளேன். நான் 27 ஆண்​டு​களாக போலீ​ஸில் பணி​யாற்றி விருதுகள், பதக்​கங்​களை பெற்​றுள்​ளேன். எங்​களது மூதாதையர் இங்​குள்ள சால்வா கிராமத்​தில்​தான் வசித்​தனர். என் தாத்​தா, பாட்​டி, அப்​பா, அம்மா ஆகிய அனை​வரும் அந்த கிராமத்​திலேயே இறந்​தனர். அவர்​களை இங்​கு​தான் அடக்​கம் செய்​தோம்.

ஆனால், திடீரென எங்​களை பாகிஸ்​தானுக்​குச் செல்​லுங்​கள் என்று கூறியது அதிர்ச்சி அளிக்​கிறது. எங்​கள் குடும்​பத்​தைச் சேர்ந்த பலர் போலீ​ஸிலும், ராணுவத்​தி​லும் பணி​யாற்​றி​யுள்​ளனர். நான் கத்ரா பகு​தி​யில் தற்​போது பணி​யாற்றி வரு​கிறேன். மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்​குச் செல்​லும் பக்​தர்​களுக்​காக கத்ரா பகுதி மலை​யடி​வாரத்​தில் முகாம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. அங்​கு​தான் எனது பணி​யைத் தொடர்​கிறேன். நானும், எனது மனை​வி, 3 குழந்​தைகளும் இங்​கு​தான் வசிப்​போம்.

நான் இந்த நாட்​டைச் சேர்ந்​தவன் இல்லை என்று கூறு​வது​தான் எனக்கு வலியை​யும் வேதனையை​யும் ஏற்​படுத்​துகிறது. நான் பாகிஸ்​தானை சேர்ந்​தவன் இல்​லை. எனக்கு அங்கு யாரும் இல்​லை. நான் இந்​தி​யன்​தான். இந்​தி​யா​தான் எனது தாய்​நாடு. நான் ஜம்​மு-​காஷ்மீர் காவல்​துறையை மனதார நேசிக்​கிறேன். நாட்​டுக்​காக என் உயிரைத் தி​யாகம்​ செய்​யத்​ தயா​ராக இருக்​கிறேன். இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x