Published : 21 Jul 2018 02:53 PM
Last Updated : 21 Jul 2018 02:53 PM

திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் சந்தன் மித்ரா: 5 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் ஐக்கியம்

பாஜகவில் இருந்து அண்மையில் விலகிய மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் சந்தன் மித்ரா, மம்தா பானர்ஜி முன்னிலையில் இன்று திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். அம்மாநிலத்தைச் சேர்ந்த 5 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தனர்.

கொல்கத்தாவில் விக்டோரியா ஹால் அருகே 1993-ம் ஆண்டு நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் நினைவு தினம் வரும் இன்று நடைபெற்று வருகிறது. உயிரிழந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் பிரமாண்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி நடந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கான திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின்போது பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களையும் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தனர். பாஜகவில் இருந்து அண்மையில் விலகிய பயனீர் பத்திரிக்கை ஆசிரியர் சந்தன் மித்ரா திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார்.

அவர் அண்மை காலமாக கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்து வந்தார். இரண்டுமுறை மாநிலங்களவை எம்.பியாக இருந்த அவர் 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஹுக்ளி தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தார்.

பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோருடன் நெருக்கமாக இருந்த சந்தன் மித்ரா, பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோரின் செயல்பாடுகளால் அதிருப்தியில் இருந்து வந்தார். சில காலமாக கட்சி நடவடிக்கை எதிலும் ஈடுபடாமல் இருந்தார்.

இந்நிலையில் மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸில் அவர் இணைந்துள்ளார். சந்தன் மித்ராவுடன், மேற்குவங்கத்தைச் சேர்ந்த, சபான யாஷிம், சமர் முகர்ஜி உள்ளிட்ட 5 காங்கிரஸ் எம்எல்ஏக்களும், அக்கட்சியில் இருந்து விலகி இன்று திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தனர். இவர்கள் அனைவரும் மால்டா மற்றும் முர்ஷிதாபாத் மாவட்டங்களைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் ஆவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x