Published : 09 Aug 2014 10:50 AM
Last Updated : 09 Aug 2014 10:50 AM

ஆழ்துளைக் கிணற்றில் சிறுவன் 6-வது நாளாக மீட்புப் பணி

கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை 6 நாட்கள் ஆகியும் மீட்க முடியாமல் மீட்புக் குழுவினர் திணறி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் சுலிகேரி கிராமத்தை சேர்ந்த ஹ‌னுமந்தப்பா ஹ‌ட்டியின் 6 வயது மகன் திம்மண்ணா, கடந்த 3-ம் தேதி 350 அடி ஆழமுள்ள‌ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். சம்பவத்த‌ன்று மாலை 4 மணிக்கு தொடங்கிய மீட்பு பணிகள் 6 நாட்கள் கடந்தும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ஆழ்துளை கிணற்றை சுற்றி 'எல்' வடிவத்தில் இதுவரை 160 அடி ஆழத்துக்கு சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது. சிறுவன் விழுந்து 6 நாட்கள் ஆகிவிட்ட தால் துர்நாற்றம் வீசத் தொடங்கி யுள்ளது.

இதனால் அச்சிறுவன் இறந் திருக்க வாய்ப்புள்ளது என மருத்துவ அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். மீட்பு பணியில் ஈடுபடு வர்களுக்கு தடுப்பூசி போடப் பட்டு, பணிகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x