Published : 23 Jun 2018 08:07 AM
Last Updated : 23 Jun 2018 08:07 AM

300 சீக்கிய பக்தர்களுக்கு பாகிஸ்தான் விசா

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள தேரா சாகிப் குருத்வாராவில் ஜூன் 21 முதல் 30 வரை அனுசரிக்கப்படும் மகாராஜா ரஞ்சித் சிங் நினைவு நாளையொட்டி இந்திய சீக்கிய பக்தர்கள் 300-க்கும் மேற்பட்டோருக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. பிற நாடுகளில் உள்ள சீக்கியர்களுக்கும் விசா வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் ஜூன் 8 முதல் 17 வரை குரு அர்ஜுன் தேவ் சிங் நினைவு நாளை அனுசரிக்க அனுமதிக்கப்பட்ட சீக்கியர் குழு இந்தியா திரும்பியுள்ளது.

இதன்மூலம், வழிபாட்டுத் தலங்களுக்கான பரஸ்பர யாத்திரை தொடர்பாக இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த 1974-ம் ஆண்டு ஏற்பட்ட உடன்பாடு மேலும் வலுப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. - ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x