Published : 21 Jun 2018 12:28 PM
Last Updated : 21 Jun 2018 12:28 PM
சர்வதேச தினம் இந்தியா முழுவதும் மிகச் சிறப்பாகவும் வித்தியாசமான முறையிலும் கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளாகவே இந்தியாவில் சர்வதேச யோகா தினம் மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதைப் போலவே இந்த வருடமும் சர்வதேச யோகா தினம் இந்தியா முழுவதும், வெகும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பனி பிரதேசம், ஆறு, கப்பல் என வித்தியாசமான இடங்களில் யோக பயிற்சிகளை ராணுவ வீரர்கள், அரசியல் தலைவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
அவற்றின் தொகுப்பு
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள திகாரு ஆற்றில் யோகாசனம் செய்யும் ரணுவ வீரர்கள்.
உத்தரகாண்டிலுள்ள டேராடூனிலுள்ள வன ஆராய்ச்சி நிறுவனத்தில் பிரதமர் நரேந்திர மோடி யோகா உடற்பயிற்சிகள் மேற்கொண்டார்.
விசாகப்பட்டினத்தில் கப்பல் துறைமுகத்தில் யோகா செய்யும் கடற்பட்டை வீரர்கள்.
முன்னாள் பிரதமர் தேவ கவுடா அவரது இல்லத்தில் யோகாசனம் செய்யும் காட்சி
இந்தியா - தீபெத் எல்லைப் பரப்பில், எல்லையோரா காவலர்கள் கடும் பனிகளுக்கு இடையே சூர்ய நமஸ்காரம் செய்யும் காட்சி.
டெல்லியிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் யோகா செய்யும் அவ்வலுவகத்தின் பணியாளர்கள்.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்திய நாத், ஆளுநர் ராம் நாய்க்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT