Published : 17 Jun 2018 09:35 AM
Last Updated : 17 Jun 2018 09:35 AM
பெண்களைக் கடத்திவந்து வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற வங்கதேச நாட்டைச் சேர்ந்த 3 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தானே மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள் மற்றும் தனியார் விடுதிகளில், கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கடந்த 2012-ம் ஆண்டு சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக வங்கதேசத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 5 பெண்களை போலீஸார் மீட்டனர்.
மேலும், அவர்களைக் கடத்தி வந்ததாக அப்சல் ஷேக் (48), அவரது மனைவி ஷிவாலி (36) மற்றும் அவரது சகோதரி நஹ்ரீஸ் (30) ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்கள் மூன்று பேரும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த வழக்கானது, தானே மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றவாளிகள் மூவருக்கும் 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், தலா ரூ.26 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT