Published : 21 Jun 2018 09:40 AM
Last Updated : 21 Jun 2018 09:40 AM

மரம் நடும் மாணவர்களுக்கு ரூ.50 ஊக்கத்தொகை: ஹரியாணா அரசு அறிவிப்பு

சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கில், ஹரியாணாவில் மரம் நடும் பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.50 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹரியாணாவில் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், சுற்றுச்சூழலை பேணுவதில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்துவது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

அப்போது, மரங்களை நடும் பள்ளி மாணவர்களுக்கு ரூ.50 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த முதல்வர் மனோகர் லால் கட்டார் ஒப்புதல் அளித்தார். 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்கலாம்.

இத்திட்டத்தின் கீழ், எத்தனை மரக்கன்றுகளை வேண்டுமானாலும் மாணவர்கள் நடலாம். அதன்படி, அவர்கள் நடவுச் செய்த மரங்களுக்கு, ஊக்கத்தொகையாக தலா ரூ.50 வீதம், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மொத்தமாக வழங்கப்படும். வரும் ஜூலை 20-ம் தேதி முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

ஹரியாணாவில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 22 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x