மணிப்பூரில் சிக்கித் தவித்த 132 என்சிசி மாணவர்கள் மீட்பு

மணிப்பூரில் சிக்கித் தவித்த 132 என்சிசி மாணவர்கள் மீட்பு
Updated on
1 min read

இம்பால்: மணிப்​பூர் தலைநகர் இம்​பாலில் உள்ள முகாமில் இந்திய விமானப் படை சார்​பில் தேசிய மாணவர் படையை (என்சிசி) சேர்ந்த மாணவ, மாண​விகளுக்கு சிறப்பு பயிற்​சிகள் வழங்​கப்​படு​கின்​றன. இதன்​படி பல்​வேறு மாநிலங்​களை சேர்ந்த என்​சிசி மாணவ, மாண​விகளுக்கு இம்​பாலில் 10 நாட்​கள் சிறப்பு பயிற்​சிகள் வழங்​கப்​பட்​டன.

மணிப்​பூரில் மைதே​யி, குகி சமு​தாய மக்​களிடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வரு​கிறது. இதன் ​காரண​மாக கடந்த சில நாட்​களாக தேசிய நெடுஞ்​சாலை 2-ல் போக்​கு​வரத்து முற்றிலுமாக முடங்கி உள்​ளது. இந்த சூழலில் என்​சிசி மாணவ, மாணவிகளை சாலை மார்க்​க​மாக அவர​வர் மாநிலங்​களுக்கு அனுப்புவதில் சிக்​கல் ஏற்​பட்​டது.

இதையடுத்து இந்​திய விமானப் படை​யின் ஏஎன்​-32 ரகத்தை சேர்ந்த 3 விமானங்​கள் மூலம் 132 என்​சிசி மாணவ, மாண​விகள் இம்​பாலில் இருந்து நேற்று அசாமின் குவாஹாட்டி நகருக்கு அழைத்​துச் செல்​லப்பட்​டனர்.

அங்​கிருந்து சாலை, ரயில் மார்க்​க​மாக அவர​வர் மாநிலங்​களுக்கு மாணவ, மாண​விகள் அனுப்பி வைக்​கப்​பட்​டனர். மணிப்​பூரில் சிக்​கித் தவித்த என்​சிசி மாணவ, மாண​வியரை பத்​திர​மாக மீட்ட வி​மானப் படைக்கு அவர்​களின்​ பெற்​றோர்​ நன்​றி தெரிவித்துள்ளனர்​.

மணிப்பூரில் சிக்கித் தவித்த 132 என்சிசி மாணவர்கள் மீட்பு
மசூதிக்குள் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: உ.பி மத குருவுக்கு ஆயுள் தண்டனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in