Published : 13 Jun 2018 09:16 AM
Last Updated : 13 Jun 2018 09:16 AM

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நிலை சீராக உள்ளது: எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு மோசமடைந்தது. உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு டாக்டர் ரந்தீப் குலேரியா தலைமையிலான டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக வாஜ்பாய் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாயின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

வாஜ்பாயின் உடல் நிலையில் நேற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது உடல் நலம் சீராக இருப்பதாகவும் சிறுநீர் பாதையில் ஏற்பட்டுள்ள தொற்று குணமாகும் வரை மருத்துவமனையில் அவர் இருப்பார் என்றும் எய்ம்ஸ் நிர்வாகம் நேற்று தெரிவித்தது. நோய் எதிர்ப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டு வருவதாகவும் சிகிச்சைக்கு அவர் ஒத்துழைப்பு அளிப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x