Last Updated : 11 Jun, 2018 04:07 PM

 

Published : 11 Jun 2018 04:07 PM
Last Updated : 11 Jun 2018 04:07 PM

முன்னாள் பிரதமர் ஏ.பி.வாஜ்பாய் மருத்துவமனையில் அனுமதி

 

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார்.

உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார் என்று முதலில் தெரிவிக்கப்பட்டநிலையில், அதை மறுத்த எய்ம்ஸ் நிர்வாகம் வாஜ்பாய் வழக்கமான உடல் பரிசோதனைக்காகவே அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவித்தது.

எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் ரன்தீப் குலேரியா மேற்பார்வையில், வாஜ்பாய்க்கு உடல்  பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவர் குலேரியாதான் வாஜ்பாய் உடல்நிலையைக் கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக மூத்த தலைவரான வாஜ்பாய், காங்கிரஸ் அல்லாத அரசு ஆட்சி அமைத்து 5 ஆண்டுகள் முழுமையாக பிரதமராக இருந்தவர். இவருக்கு தற்போது 93 வயதாகிறது. இவருக்கு பத்மவிபூஷன் விருதும், மிக உயரிய பாரத ரத்னா விருதும் வழங்கி அரசு கவுரவித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி வாஜ்பாய் தனது 93-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். வயது மூப்பு, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக வாஜ்பாய் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“பைரசி என்ற வார்த்தையையே இப்போது விஷால் பயன்படுத்தாதது ஏன்?” - சுரேஷ் காமாட்சி கேள்வி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x