Published : 19 Aug 2014 10:07 AM
Last Updated : 19 Aug 2014 10:07 AM
ஓடும் ரயிலில் தீ பரவியதாக வதந்தி பரவியதால், 200-க்கும் மேற்பட்ட பயணிகள் பீதியடைந்து கீழே குதித்ததில் காயமடைந்தனர்.
ரயில், பஸ்களில் தீ விபத்து ஏற்படுவது சமீப காலங்களில் தொடர்கிறது. வெளியூர் பயணம் என்றாலே மக்கள் அச்சப்படும் நிலை உள்ளது. இந்நிலையில் திங்கள் கிழமை காலை நிஜாமாபாத் - காச்சிகூடா எக்ஸ்பிரஸ் ரயில் ஹைதராபாத் அருகே குண்டல போச்சம்பள்ளி என்ற இடத்தில் வந்துகொண்டிருந்தது. அப்போது, ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக வதந்தி கிளம்பியது.
இதனால் பீதியடைந்த பயணி கள், ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதில் ரயில் நிற்பதற்குள் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயிலில் இருந்து கீழே குதித்தனர். இதனால் இவர்கள் காயமடைந்தனர்.
பின்னர், ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து, காய மடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT