Published : 24 May 2018 10:12 AM
Last Updated : 24 May 2018 10:12 AM
டெல்லி மாநில அரசின் தலைமைச் செயலர் மீது நடந்த தாக்குதல் தொடர்பான வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு டெல்லி போலீஸார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் இல்லத்தில் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷைத் தாக்கியதாக ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் அமானத்துல் லாகான், பிரகாஷ் ஜர்வால் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் இதுவரை டெல்லி போலீஸார், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 11 பேரை விசாரித்துள்ளனர். இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணையின்போது ஆஜராக வேண்டும் என்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு நேற்று டெல்லி போலீஸார் நோட் டீஸ் அனுப்பியுள்ளனர்.
அதன்படி, வரும் மே 25-ம் தேதி காலை 11 மணிக்கு டெல்லி போலீஸார் முன் சிசோடியா நேரில் ஆஜராகவேண்டும் என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT