Published : 26 May 2018 08:52 AM
Last Updated : 26 May 2018 08:52 AM

மோகினி அவதாரத்தில் கோவிந்தர் பவனி

திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற திருக்கோயிலான கோவிந்தராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 21ம் தேதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் தினமும், காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் உற்சவ மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர்.

வரும் 29-ம் தேதி வரை நடைபெறும் இந்த உற்சவத்தின் 5-ம் நாளான நேற்று காலை, மோகினி அவதாரத்தில் கோவிந்தர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை தொடர்ந்து நேற்று இரவு கருட சேவை நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தது.

இதில் பெரும்திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x