Published : 26 May 2018 08:46 AM
Last Updated : 26 May 2018 08:46 AM

ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும்: மத்திய அமைச்சர் தகவல்

ஸ்டெர்லைட் விவகாரத்தில் போராட்டக்காரர்களின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று முன்தினம் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷ வர்தன் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் நடந்த சம்பவங்கள் பற்றி அறிந்துகொண்டேன். இதுபற்றி நிச்சயம் ஆராய்வோம். போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும். ஸ்டெர்லைட் ஆலை அமைக்க மத்தியில் ஏற்கெனவே இருந்த காங்கிரஸ் அரசுதான் அனுமதி கொடுத்தது. இதை பிரச்சினையாக்க விரும்பவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x