Published : 14 May 2018 12:36 PM
Last Updated : 14 May 2018 12:36 PM
ஹரியாணாவில் குருக்ராம் அருகே, சமையல் செய்வது யார் என்ற தகராறில் தம்பியே அண்ணனை வெட்டிக்கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து போலீஸார் தெரிவித்ததாவது:
சரஸ்வதி என்க்ளேவ் பகுதியில் அண்ணன் தம்பி இருவரும் அறை எடுத்து தங்கி வசித்து வந்தனர். அவர்களது பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் அளித்த புகாரின் பேரில் பல்வந்த் சிங் கைது செய்யப்பட்டார்.
பல்வந்த் சிங் தனது வாக்குமூலத்தில், "நானும் என் மூத்த சகோதரர் ஜெய்சிங் (29) இருவரும் நகரின் வெவ்வேறு பகுதிகளில் வெல்டிங் பணிகள் செய்துவந்தோம். ஜெய்சிங், நேரத்தோடு வீட்டுக்கு வருவதில்லை. எனக்கு மறுநாள் வேலைக்கு சீக்கிரம் போக வேண்டும் என்பதால் இது எனக்கு மிகவும் தொந்தரவாக இருந்தது.
ஆனால், அடிக்கடி தாமதமாக வீட்டுக்கு வருவதோடு அச்சமயம் சமைக்கச் சொல்லி என்னை வற்புறுத்துவார். மூன்று நாட்களுக்கு முன்னர் நாங்கள் இந்த விவகாரத்தில் சண்டையிட்டுள்ளோம். 'நீயே சமையல் செய்துகொள்' என்று நான் கூறிவிட்டேன். ஆனால், நான் அந்நேரத்தில் எழுந்து சமைக்க வேண்டும் என என்னை வற்புறுத்துவார்.
சம்பவத்தன்றும் அவர் வழக்கம்போல தாமதமாக வீட்டுக்கு வந்தார். என்னை சமைக்கும்படி வற்புறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த நான் அவரைக் கொன்றேன்.'' என்று தெரிவித்துள்ளார்.
யாதவ் தனது சகோதரரை நேற்று முன்தினம் (சனிக்கிழமை) தொண்டையை வெட்டிக்கொன்றதாக ஊடகத்திடம் ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT