Published : 21 May 2018 08:36 AM
Last Updated : 21 May 2018 08:36 AM

சத்தீஸ்கரில் நக்சல் தீவிரவாதிகள் புதைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி 6 போலீஸார் பலி

சத்தீஸ்கரில் நக்சல் தீவிரவாதிகள் நேற்று நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 6 போலீஸார் உயிரிழந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்தில் நக்சல் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. அங்கு மக்கள் நலத் திட்டப் பணிகளை நிறைவேற்றவிடாமல் நக்சல்கள் தொடர்ந்து இடையூறு செய்து வருகின்றனர். இந்நிலையில், சோழானர் பகுதியில் புதிதாக சாலை அமைக்கப்படுகிறது. இந்தப் பணியில் ஈடுபடும் ஊழியர்களின் பாதுகாப்புக்காக சத்தீஸ்கர் அதிரடிப் படை போலீஸார் நேற்று வாகனத்தில் சென்றனர்.

சோழானர் கிராமத்தை நெருங்கியபோது சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் வாகனம் சிக்கி வெடித்துச் சிதறியது. இதில் 6 போலீஸார் பலியாயினர் 2 போலீஸார் காயம் அடைந்தனர். இதுகுறித்து நக்சல் தீவிரவாத எதிர்ப்பு படை டிஐஜி சுந்தர் ராஜ் கூறியபோது, “சக்திவாய்ந்த கண்ணிவெடி தாக்குதல் நடத்திய நக்சல்களை தேடி வருகிறோம்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x