Published : 08 May 2018 04:15 PM
Last Updated : 08 May 2018 04:15 PM

நாக்குத் தவறி மோடியைப் புகழ்ந்து பேசி பிறகு நெளிந்து சமாளித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா

கர்நாடகா தேர்தல் களத்தில் நாக்குத் தவறுதல் அதிகம் நிகழ்கிறது, முதற்கட்ட தேர்தல் பிரச்சாரங்களில் அமித் ஷா நாக்குத் தவறி அது காங்கிரஸ் கட்சியினரால் பெரிய அளவுக்கு கேலி செய்யப்பட்டது.

தற்போது கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சியினரும் நாக்குத் தவற தொடங்கியுள்ளனர்.

இதற்கு முன்னோடியாக முதல்வர் சித்தராமையாவே நாக்குத் தவறி பிரதமர் நரேந்திர மோடியைப் புகழ்ந்த சம்பவம் காங்கிரசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எப்போதும் நரேந்திர மோடியையே நினைத்துக் கொண்டிருப்பதால் நாக்கு தவறி தங்கள் கட்சி வேட்பாளர் நரேந்திர சாமியைப் புகழ்வதற்குப் பதிலாக நரேந்திர மோடியைப் புகழ்ந்தார் சித்தராமையா.

இதோ முதல்வர் பேசியது: “அனைத்து கிராமங்களிலும் சாலைப்பணிகள், குடிநீர், வீடு கட்டும் பணிகள், அனைத்தும் நமக்கு சாத்தியமானது நம்மாலும் நரேந்திர மோடியாலும்தான்” என்றாரே பார்க்கலாம் உடனேயே வேட்பாளர் நரேந்திர சாமிக்கு தூக்கிவாரிப் போட்டு இடைமறித்துத் திருத்தினார்.

உடனேயே “சாரி சாரி நரேந்திர சாமி முக்கியமான வார்த்தை நரேந்திரா” என்று வழிந்தார்.

உடனேயே செய்த தவறுக்கு மேக்-அப் செய்யும் விதமாக “சுவாமி இங்கிருக்கிறார், மோடி குஜராத்தில் இருக்கிறார், நரேந்திர மோடி புனைவு, நரேந்திர சாமி உண்மை” என்று அசட்டுத்தனமாக ஏதோ பேசி சமாளித்தார் சித்தராமையா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x