Last Updated : 30 May, 2018 04:39 PM

 

Published : 30 May 2018 04:39 PM
Last Updated : 30 May 2018 04:39 PM

குண்டு பாய்ந்த நிலையிலும் துப்பாக்கிச் சண்டை: மாடு கடத்தியவர்களை மடக்கி பிடித்த போலீஸார்

ஹரியாணா மாநிலத்தில்  குண்டு பாய்ந்து பலத்த காயமடைந்த நிலையிலும், கடும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட இரு போலீஸ்காரர்கள், கடத்தல்காரர்களை மடக்கி பிடித்து, மாடுகளை மீட்டனர்.

போலீஸாரால் அதிகம் தேடப்பட்டு வரும் குற்றவாளி மாடு கடத்தல் கும்பலைச் சேர்ந்த சுபா அலியாஸ் சபுதீன், ஹரியாணா மாநிலத்தில் மிவாட்டுக்கு அருகிலுள்ள பல்லா கிராமத்தைச் சேர்ந்தவர். இவரைப் பிடித்துத் தருபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று ஏற்கெனவே போலீஸ் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் அலியாஸ் உட்பட சிலர் டாடா 407 வாகனத்தில் மாடுகளை ஏற்றிக்கொண்டு ரிவாரி மாவட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதனை அடுத்து அவ்வழியே சென்று போலீஸார் பாதையை குறுக்கே மறித்து நின்றனர். பாதையை மறித்து நிற்கும் போலீஸாரைப் பார்த்ததும் மாடு கடத்தல்காரர்கள் தங்கள் பாதையை மாற்றினர். இதைத்தொடர்ந்து போலீஸார் அவர்களை நோக்கி பல்வேறுமுறை துப்பாக்கியால் சுட்டனர்.

மஜ்ரி கிராமத்தில் இருந்த பாரிகாடுகளை உடைத்துவிட்டு தப்பிச்சென்ற கடத்தல்காரர்கள் போலீஸாரை நோக்கி சுடத் தொடங்கினர்.

அதில் இரண்டு போலீஸ்காரர்கள் மீது குண்டு பாய்ந்தது. போலீஸ் படையினர், சோடாவாஸ் பத்மாடா கிராமம் அருகே, அச்சமின்றி தங்கள் உயிரை பணயம் வைத்து, மாடு கடத்தலில் ஈடுபட்ட மூவரையும் கைதுசெய்து அவாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

போலீஸ் கான்ஸ்டபிள் ரன்பீர் மற்றும் ஹெட் கான்ஸ்டபிள் ரவி தத் ஆகிய இருவர் மீதும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்துள்ளதால் இவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x