Published : 21 May 2018 08:34 AM
Last Updated : 21 May 2018 08:34 AM

எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் அதிரடி; பாகிஸ்தான் பகுதியில் பயங்கர சேதம்: தாக்குதலை நிறுத்த பாக். ராணுவத்தினர் வேண்டுகோள்

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரின் அதிரடி தாக்குதலில், பாகிஸ்தான் பகுதியில் பயங்கர சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாடு கோடு மற்றும் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து சில நாட்களாகத் தாக்குதல் நடத்தி வந்தனர். இதில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் (பிஎஸ்எப்) சேர்ந்த 2 வீரர்கள், பொதுமக்கள் பலர் பலியாயினர். இதற்கு பிஎஸ்எப் வீரர்கள் நேற்று சரியான பதிலடி கொடுத்தனர். பீரங்கி குண்டுகளை சரமாரியாக வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் இடைவிடாமல் பயங்கர தாக்குதல் நடத்தினர்.

இதில் இந்திய - பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கு அப்பால் பாகிஸ்தான் படையில் பயங்கர சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் வீரர்கள் சிலரும் உயிரிழந்துள்ளனர். பிஎஸ்எப் வீரர்களின் அதிரடியை சமாளிக்க முடியாமல், தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஜம்மு பிஎஸ்எப் மேலதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். இத்தகவலை பிஎஸ்எப் மூத்த அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

மேலும், பாகிஸ்தான் பகுதியில் நடத்திய தாக்குதல் காட்சிகள் அடங்கிய 19 வினாடி வீடியோவையும் பிஎஸ்எப் அதிகாரிகள் வெளியிட்டனர்.

இந்த ஆண்டு இதுவரை பாகிஸ்தான் படையினர் எல்லைக்கு அப்பால் இருந்து 700 முறைக்கு மேல் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் 18 இந்திய வீரர்கள், 38 பொதுமக்கள் பலியாகி உள்ளனர். அதற்கு கடந்த 3 நாட்களாக பிஎஸ்எப் வீரர்கள் பதிலடி கொடுத்ததில் பாகிஸ்தான் ராணுவத் தரப்பில் பலத்த தேசம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x