Last Updated : 11 May, 2018 05:49 PM

 

Published : 11 May 2018 05:49 PM
Last Updated : 11 May 2018 05:49 PM

நம்பினால் நம்புங்கள்.. ‘பேப்பர் பாத்திரத்தில்’ டீ போடும் மனிதர்

உலோகப் பாத்திரங்களில், மண் பாண்டங்களில் டீ போடுவதை பார்த்திருக்கிறோம், ஆனால், பேப்பர்பாத்திரத்தில் டீ போடுவதை பார்த்ததுண்டா..

நம்புங்கள் உண்மைதான் இப்படியும் ஒரு சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் நடக்கிறது. அடிலாபாத் மாவட்டத்தில் உள்ள சந்தா கிராமத்தில்தான் டீக்கடை வைத்திருக்கும் ஒருவர் தன்னிடம் கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு பேப்பர் பாத்திரத்தில் டீபோட்டுக் கொடுக்கிறார்.

சந்தா கிராமத்தைச் சேர்ந்த அன்னுகா அன்னுபையா(வயது55) என்பவர்தான் பேப்பர் பாத்திரத்தில் டீபோட்டுக்கொடுக்கிறார். தன்னிடம் வரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இவர் பேப்பர்பாத்திரத்தில் டீ போட்டுக்கொடுப்பதில்லை, விரும்பிக் கேட்கும் சிலநபர்களுக்கு மட்டுமே இதைச் செய்துகாட்டுகிறார்.

அன்னுபையா12-வயதில் இருந்து டீக்கடையில் வேலைபார்த்து வருகிறார்.  சந்தா ஸ்டிரீம் பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ளடீக்கடையில் வேலைபார்க்கும் போது, பேப்பர் பாத்திரத்தில் டீ போடும் வித்தையைக் கற்றுள்ளார்.

பேப்பர் பாத்திரத்தில் எப்படி டீ போடுவது குறித்து அன்னுபையா நம்மிடம் கூறியதாவது:

6 இஞ்ச் அகலமும், நீளமும் கொண்ட செய்தித்தாளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதை ஒரு பாத்திரம்போல் செய்து கொண்டு காற்றுபுகாத வகையில் காட்டுமுள்கள் கொண்டு நான்கு மூலைகளையும் குத்திவிட வேண்டும்.

இந்த வகையான பேப்பர் பாத்திரத்தைச் செய்வதற்கு காட்டுமுள்(ஆங்கிலத்தில் அகாசியா தார்ன்ஸ், அம்பர்லா தார்ன்ஸ்) இந்தப் பேப்பர் பாத்திரம் செய்வதற்கு இந்த வகையான முட்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அந்தப்பாத்திரத்தை அந்த முட்கள் கொண்டு காற்றுப்புகாத வகையில் இணைத்து, பேப்பரும் நெருப்பில் எரிந்துவிடாமல் குத்திவைக்க வேண்டும்

அதன்பின் 60 மில்லி பாலை அந்த பேப்பர் பாத்திரத்தில் ஊற்றி, டீத்தூள், சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்துடீ தயாரிக்கலாம். ஆனால், வழக்கான அடுப்பிலும், நெருப்பிலும் இல்லை. மாறாக, கிராமங்களில்பயன்படுத்தப்படும் ஊதுகுழல் மூலம் மெல்லிதான நெருப்பு வரும் அடுப்பில் இந்தக் காகித பாத்திரத்தைவைக்க வேண்டும். அவ்வப்போது நெருப்பு மேலே வரும் வகையில் வாயின் மூலம் காற்றை செலுத்திபாத்திரத்தை சூடாக்க வேண்டும். அதிகமான நெருப்பு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

நாம் குத்தியிருக்கும் முட்கள் மூலம் நெருப்பு பட்டு சூடாகி, பாலும் சூடாகத்தொடங்கும். அதன்பின் பால்கொதிநிலையை அடைந்து, டீ தயாராகும். இந்த வகையான பேப்பர் பாத்திரம் மூலம் அதிகபட்சம் 70 மில்லிடீ தயாரிக்க முடியும். பால் கொதிநிலையை அடையும் போது, பாத்திரத்தை ஈரமாக்கும். அதைத் தவிர்க்கும்வகையில், அவ்வப்போது நெருப்பை அதிகமான கொண்டுவந்தால், காகிதப் பாத்திரம் ஈரமாகாது.

இதுபோன்று பேப்பர் பாத்திரத்தில் டீ போடும் முறையை நான் பொழுதுபோக்காகவே செய்து வருகிறேன். யாரேனும் ஸ்பெசலாக ஆர்டர் செய்தால் அவர்களுக்காகச் செய்து கொடுப்பேன். இதற்காக நான்யாரிடமும் பணம் வாங்குவதில்லை. ஏறக்குறைய 5 நிமிடங்களில் பேப்பர் பாத்திரத்தில் டீ தயாரிக்கமுடியும்.

இவ்வாறு அன்னு தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x