Published : 20 Apr 2018 07:32 PM
Last Updated : 20 Apr 2018 07:32 PM
நீதிபதி லோயா மரணம் குறித்து தனித்த விசாரணை தேவை என்ற கோரிக்கைகளை உச்ச நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து அவரது சகோதரர் ஸ்ரீநிவாஸ் லோயா வருத்தம் தெரிவித்துள்ளார்.
“இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கூறியதையும் குறித்துக் கொண்ட உச்ச நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளது. இதில் எங்கள் நிலைப்பாடு என்ன? நாங்கள் சிறிய மனிதர்கள்.
இப்போது இது குறித்து எதுவும் பேசாமல் இருப்பதுதான் சிறந்தது. இனிமேல் எங்களால் என்ன செய்ய முடியும்? எது செய்தாலும் அது விரயம்தான்” என்று வருந்தியுள்ளார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கில் தீர்ப்பு கூறும்போது, “நீதிபதி லோயாவுடன் அவரது கடைசி தருணங்களில் இருந்த நீதிபதிகளான குல்கர்னி, பார்தே, மோடக், ஜேஆர்ஆர்.ரதி ஆகியோரது வாக்குமூலங்களை சந்தேகிக்க இடமில்லை. நீதிபதி லோயா மரணம் இயற்கையானது, துரதிர்ஷ்டவசமானது” என்று கூறி மனுக்களை நிராகரித்தது தற்போது சர்ச்சையாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT