Published : 15 Apr 2018 07:33 PM
Last Updated : 15 Apr 2018 07:33 PM

ராஜஸ்தானில் தடுத்து நிறுத்தப்பட்ட ஜிக்னேஷ் மேவானி

ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்ற குஜராத் மாநில எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி தடுத்து நிறுத்தப்பட்டார்.

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் நடந்த முழு அடைப்பு போராட்டத்தில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. ராஜஸ்தான் மாநிலம் நாகவூர் பகுதியிலும் வன்முறை நடந்தது. இதனால், அங்கு 144 தடை உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாகவுரில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நடக்க உள்ளது. இந்த விழாவில் பேசுவதற்காக குஜராத் மாநிலம் வட்காம் தொகுதி எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி அழைக்கப்பட்டிருந்தார்.

அவர் இன்று ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கியதும் போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.

144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் மேவானி கூறியுள்ளதாவது

“விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் சில போலீசார் வந்து நாகவுர் நகருக்குள் நுழைய உங்களுக்கு அனுமதி இல்லை என கூறினர். மேலும், என்னை அகமதாபாத்திற்கு திரும்பி செல்லுமாறு கட்டாயப்படுத்திகின்றனர். ஊடகங்களிடமும் பேச அனுமதி அளிக்கவில்லை” என பதிவிட்டுள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x