Published : 09 May 2024 05:30 AM
Last Updated : 09 May 2024 05:30 AM

கருப்பு, பழுப்பு நிறம் சிறந்தது: மருத்துவர் சு.முருகுசுந்தரம் விளக்கம்

சாம் பிட்ரோடா

இந்தியர்களை தோலின் நிறத்தின் அடிப்படையில் பிரித்து காங்கிரஸ் கட்சியின் வெளிநாடுவாழ் இந்தியர் பிரிவின் தலைவர் சாம் பிட்ரோடா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து சென்னை தோல் மருத்துவ மைய இயக்குநர் மருத்துவர் சு.முருகுசுந்தரம் கூறியதாவது: தோலுக்கு நிறம் கொடுக்கக் கூடியது நிறமி செல்கள் (மெலனோசைட்). கருப்பு, பழுப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும் அனைவருக்கும் நிறமி செல்கள் ஒரே எண்ணிக்கையில்தான் உள்ளது. அவை உற்பத்தி செய்கிற நிறமியின் பெயர்தான் மெலனின். அதன் அளவுதான் வேறுபடுகிறது.

நிறமி என்ற மெலனினை அதிகமாக உற்பத்தி செய்யும் தோல்தான் சிறந்தது. அது சூரிய ஒளியில் உள்ள புற ஊதா கதிர்களை ஊடுருவ விடாது. சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்புகள், தோல் சுருக்கம் போன்றவை கருப்பு மற்றும் பழுப்பு தோல்களில் மிகவும் குறைவு. உலகிலேயே மிகவும் அரிதான புற்றுநோய் மெலனின் அதிகமாக இருக்கும் இந்தியர்களின் தோலில் வராது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x