Published : 07 May 2024 08:10 AM
Last Updated : 07 May 2024 08:10 AM

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதா ஜாமீன் மனு சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி

கவிதா

ஹைதராபாத்: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தற்போது திஹார் சிறையில் நீதிமன்ற காவலில் இருப்பவர் தெலங்கானா மேலவை உறுப்பினர் கவிதா. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குகளில் தமக்கு ஜாமீன் வழங்க வேண்டுமெனவும், தெலங்கானாவில் நடைபெற உள்ள தேர்தலில் கண்டிப்பாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டுமெனவும் அவர் அந்த ஜாமீனில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தன்னை கைது செய்தது சரியில்லை எனவும் அதனால் தன்னை அவ்வழக்கில் இருந்தும் விடுபட வைக்க வேண்டுமெனவும் அவர் 2 ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் மீது இரு தரப்பினரும் வாதங்கள் செய்தனர். இந்த மதுபான கொள்கை வழக்கில் முக்கிய குற்றவாளியே கவிதா தான் எனவும், அவரை ஜாமீனில் வெளியே அனுப்பினால், சாட்சிகளை அரசியல் பலத்தால் மிரட்டும் அபாயம் உள்ளதால், கவிதாவுக்கு ஜாமீன் வழங்க கூடாது என சிபிஐ மற்றும் அமலாக்கதுறை சார்பில் வழக்கறிஞர்கள் வாதாடினர். இதையடுத்து கவிதாவின் ஜாமீன் மனுக்களை சிபிஐ நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x