Published : 11 Apr 2018 07:22 AM
Last Updated : 11 Apr 2018 07:22 AM
ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்த போது ராஞ்சியிலும் பூரியிலும் ரயில்வேயின் கட்டுப்பாட்டில் இருந்த இரண்டு ஐஆர்சிடிசி ஓட்டல்களைப் பராமரிக்க தனியார் நிறுவனத்துக்கு முறைகேடாக அனுமதி அளித்ததாக சிபிஐ குற்றம்சாட்டியது. இந்த ஒப்பந்தங்களை வழங்கியதற்கு கைமாறாக பாட்னாவில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை லாலுவும் அவரது குடும்பத்தாரும் பினாமி நிறுவனம் மூலம் பெற்றுக் கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக லாலு, அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், ரயில்வே ஓட்டல் நில பேர ஊழல் வழக்கு தொடர்பாக பாட்னாவில் உள்ள லாலு பிரசாத் வீட்டில் ராப்ரி தேவியிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT