Published : 04 Apr 2018 05:31 PM
Last Updated : 04 Apr 2018 05:31 PM
பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இதுதொடர்பாக பிரதமர் மோடியை ‘தவறான தகவல் மன்னன்’ என கிண்டல் செய்து வீடியோவை ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை 4 ஆண்டுகளில் இல்லாத அளவு கடுமையாக உயர்ந்துள்ளது. வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இதற்கு கண்டனம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், ‘‘மற்ற நாடுகளை பற்றி எப்போதும் முன்னுதாரணமாக பேசும் பிரதமர் மோடி, பெட்ரோல் டீசல் விலை விஷயத்தில் மற்ற நாடுகளை பின்பற்றுவதில்லையே. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடியும் வெளிநாடுகளை பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறார்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதனுடன் ‘‘தவறான தகவல் மன்னன்’’ என குறிப்பிட்டு வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
The poor & the middle class bear the brunt of rising fuel prices. In this video, our PM is quite obviously talking about some other country. #PeTrolled pic.twitter.com/J6PHC7UsJZ
— Rahul Gandhi (@RahulGandhi) April 4, 2018
அந்த வீடியோவில் பிரதமர் மோடி பேசுகிறார். அதில் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருகிறது என பிரதமர் மோடி கூறுகிறார். அதனை கேட்டு இந்தி நடிகர் சல்மான் கான் சிரிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT