Published : 18 Apr 2018 08:07 AM
Last Updated : 18 Apr 2018 08:07 AM
சமூக வலைத்தளத்தில் ராமரும் சீதையும் பேசிக்கொள்வது போல் ஒரு கருத்துச் சித்திரத்தை வெளியிட்ட பெண் நிருபர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சமீப காலமாக நாட்டில் சிறுமிகள் மீது பாலியல் வன்கொடுமை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஆங்கில பத்திரிக்கையில் பணியாற்றும் பெண் நிருபரான சுவாதி, தனது சமூக வலைத்தளத்தில் ராமரும் சீதையும் உரையாடுவது போன்ற ஒரு கருத்துச் சித்திரத்தை கடந்த 10-ம் தேதி வெளியிட்டார். இந்த கருத்து சித்திரம் வெளியானதிலிருந்து இதனை பலர் பாராட்டி கருத்து தெரிவித்திருந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் இதனை ஷேர் செய்திருந்தனர்.
இந்நிலையில், இந்துக்களின் மனம் புண்படும்படி கருத்துச் சித்திரம் வெளியிட்டுள்ள சுவாதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சங்கட்டன் அமைப்பின் தலைவரும், வழக்கறிஞருமான கே. கருணா சாகர், ஹைதராபாத் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில், 295 (ஏ) பிரிவின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து சுவாதி கூறும்போது, “எனது கருத்தைச் சொல்ல எனக்கு உரிமை உண்டு. என் மீது வழக்குப் பதிவு செய்ததாக கூறுகின்றனர். இதுவரை எனக்கு போலீஸாரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. இதனை நான் சட்டரீதியாக எதிர்கொள்வேன்” என்றார்.
போலீஸாரின் இந்த நடவடிக்கை கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என தெலங்கானா பத்திரிக்கையாளர் சங்கத்தினர் தெரிவித் துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT