Published : 05 Apr 2018 03:00 PM
Last Updated : 05 Apr 2018 03:00 PM
5.62 லட்சம் இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்திற்கு முறையற்ற வகையில் பகிரப்பட்டிருக்கலாம் என ஃபேஸ்புக் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.
இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற அரசியல் தகவல் ஆய்வு நிறுவனம், அமெரிக்கத் அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் நிறுவனத்திடமிருந்து தகவல்களைப் பெற்று மக்கள் மனதில் மாற்றத்தை உண்டாக்கி தேர்தலில் முடிவுகள் மாற பெரிதும் துணை புரிந்தது.
அமெரிக்கா மட்டுமின்றி ஜெர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுளகளிலும் நடைபெற்ற தேர்தல்களில் அனலிட்டிகா நிறுவனம் இதே போன்ற முறைகேடுகளை நடந்த்தியதும் அம்பலமானது. இந்த விவகாரம் 'ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக பெரும் எதிர்ப்பை கிளப்பியது. இதையடுத்து, தவறுகள் நடந்துள்ளதை ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனத்தில் இருந்து 8.7 கோடி மக்களின் தகவல்கள் முறையற்ற வகையில் பகிரப்பட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக 5.62 லட்சம் இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஃபேஸ்புக் வாயிலாக அனலிட்டிகா நிறுவனத்திற்கு முறையற்ற வகையில் பகிரப்பட்டிருக்கலாம் என தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்து.
இந்தியாவில் மொத்தம் 5 லட்சத்து 62 ஆயிரத்து 455 பேரின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்பக் வாயிலாக அனலிட்டிகா நிறுவனத்திற்கு பகிரப்பட்டிருக்க வாய்ப்புள்ளது, எனினும் இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறோம் என ஃபேஸ்புக் நிறுவனத்தின் உயரதிகாரி மைக் ஷ்ரோப்பர் கூறியுள்ளார்.
இந்திய தேர்தலில் அனலிட்டிகா நிறுவனம் தலையிட்டதாகவும், காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றியதாகவும் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் குற்றம்சாட்டி இருந்தார். ஃபேஸ்புக் வழியாக இந்தியர்களின் தகவல்கள் அனலிட்டிகா நிறுவனத்திற்கு பகிரப்பட்டது குறித்து அந்த நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டி அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT