Last Updated : 19 Apr, 2018 08:33 AM

 

Published : 19 Apr 2018 08:33 AM
Last Updated : 19 Apr 2018 08:33 AM

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்

கர்நாடகாவில் உள்ள பெல்காமில் ரூ.7 கோடி மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலந்து கொடுப்பதற்காக இவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தாக தெரிய வந்துள்ளது.

கர்நாடகாவில் வரும் மே 12-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக ஆளும் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய கட்சிகள் தீவிர வாக்குவேட்டையில் ஈடுபட்டுள்ளன. பல்வேறு தொகுதிகளில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.30 கோடி பணம், பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில் பெல்காம் மாவட்டத்தில் உள்ள விஸ்வேஸ்வரய்யா நகரில் கள்ள நோட்டு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி.பாட்டீலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்.பி. பாட்டீல் அப்பகுதிக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டபோது, பீஜாப்பூரை சேர்ந்த அஜீத்குமார் சென்னப்பா என்பவரிடம் ரூ.7 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள் சிக்கின.

இதுதொடர்பாக பெல்காம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அஜீத்குமார் சென்னப்பாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், வாக்காளர்களுக்கு கொடுக் கும் பணத்துடன் இந்த கள்ள நோட்டுகளையும் கலந்து கொடுக்க திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. தேர்தலை மைய மாக வைத்து சமூக விரோத கும்பல் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதாக சந்தேகம் எழுந்துள்ளதால் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x