Published : 01 Feb 2018 06:03 PM
Last Updated : 01 Feb 2018 06:03 PM
நிதிப்பற்றாக்குறை பரீட்சையில் அருண் ஜேட்லி தோல்வியடைந்து விட்டார், கடவுளுக்கு நன்றி, இந்த அரசின் கடைசி பட்ஜெட் இதுவே என்று காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ப.சிதம்பரம், “அனைத்துப் பற்றாக்குறைகளும் பட்ஜெட் கணிப்புகளைத் தாண்டிச் சென்று விட்டது. ஏற்றுமதிகளைப் பெருக்க எந்த திட்டங்களும் இல்லை. குடும்பச் சுகாதாரத்துக்காக ரூ.5 லட்சம் என்பது பெரிய ‘ஜும்லா’.
2017-18-ல் நிதிப்பற்றாக்குறை வரம்பு 3.2% என்பது மீறப்பட்டு தற்போது 3.5% ஆகக் கணிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கான பட்ஜெட் என்கிறார், ஆனால் விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பதற்கு எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை. விவசாயிகள் துயரம் தொடரும்.
இந்த அரசின் கடைசி பட்ஜெட் இது, இதற்காகக் கடவுளுக்கு நன்றி” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT