Published : 07 Feb 2018 08:39 AM
Last Updated : 07 Feb 2018 08:39 AM
நடிகை தீபிகா படுகோன் நடித்த ‘பத்மாவத்’ திரைப்படத்தில் ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டி கர்னி சேனா உள்ளிட்ட ராஜபுத்திர அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்நிலையில் நடிகை கங்கனா ரணாவத் நடித்து வரும் ‘மணிகர்னிகா’ என்ற திரைப்படத்துக்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்த திரைப்படம் ராணி லட்சுமிபாயின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. இதில் ராணி லட்சுமிபாய்க்கும் கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த பிரிட்டிஷ் ஏஜென்ட் ஒருவருக்கும் இடையே காதல் ஏற்படுவதாக காட்சி உள்ளது என்று சர்வ பிராமண மகாசபா என்ற அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் கமல் ஜெயினிடம் விளக்கம் கேட்டு சர்வ பிராமண மகாசபா தலைவர் சுரேஷ் மிஸ்ரா கடிதம் எழுதியுள்ளார்.
ராணி லட்சுமிபாயின் கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டிருந்தால் பத்மாவத் திரைப்படத்துக்கு நேர்ந்த கதி மணிகர்னிகாவுக்கும் ஏற்படும் என்று சுரேஷ் மிஸ்ரா எச்சரிக்கை விடுத்துள் ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT