Published : 24 Feb 2018 07:40 AM
Last Updated : 24 Feb 2018 07:40 AM

பொறுத்துக் கொள்ள முடியாது: மோடி ஆவேசம்

காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு கனடா அரசு ஆதரவாக செயல்படுகிறது என்று குற்றச்சாட்டு உள்ளது. அதற்கேற்ப காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஜஸ்பால் அத்வாலுடன், கனடா பிரதமர் ட்ரூடோவின் மனைவி சோபியும் பங்கேற்றார்.

இந்நிலையில், ட்ரூடோவை டெல்லியில் நேற்று சந்தித்த பிறகு பிரதமர் மோடி கூறும்போது, ‘‘இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமைக்கு சவால் விடுபவர்களைப் பொறுத்துக்கொள்ள முடியாது. அரசியல் நோக்கத்துக்காகவோ அல்லது பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதற்காகவோ மதத்தைப் பயன்படுத்த இந்தியாவில் இடமில்லை’’ என்று கூறினார். அமிர்தசரஸில் கனடா பிரதமர் ட்ரூடோவை, முதல்வர் அமரிந்தர் சிங் சந்தித்த போது, காலிஸ்தான் பிரிவினைவாதிகள் விஷயத்தில், கனடா ஆதரவாக இருப்பதாக அதிருப்தி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x