Published : 16 Feb 2018 06:32 PM
Last Updated : 16 Feb 2018 06:32 PM
உலக அளவில் பிரபலமான ஆந்திர மாநிலத்தின் குண்டூர் மிளகாய் வர்த்தகத்தை ஆவணப்படமாக எடுக்க பிபிசி திட்டமிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பிபிசி ஆவணப்படம் குழு வியாழக்கிழமை குண்டூரிலுள்ள உலகின் மிகப் பெரிய மிளகாய் சந்தைக்கு வருகை தந்து அச்சந்தையின் தலைவர், வணிகர்கள் விவசாயிகள், சந்தித்து பேசியுள்ளனர்.
மேலும் ஆன் லைனில் குண்டூர் மிளகாய்கள் எப்படி விற்பனை செய்யப்படுகின்றன என்பது குறித்து ஆவணப்படகுழு ஆலோசித்துள்ளது.
இந்த ஆவணப்படத்துக்கு ’புனித மிளகாய்’ என்று தலைப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து குண்டூர் சந்தை தலைவர் சுபா ராவ் கூறும்போது, “குண்டூரில் மிளகாய் வர்த்தகம் எப்படி நடக்கிறது என்று அவர்கள் அறிய விரும்புக்கின்றனர். ஒரு நாளைக்கு சுமார் 10,000 விவாசயிகள் இந்தச் சந்தைக்கு வருகை தருகின்றனர்.
உலகின் 12 நாடுகளுக்கு குண்டூர் மிளகாய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மெக்சிகோவுக்கு பிறகு மிளகாய் வர்த்தகம் அதிக அளவில் நடைபெறுவது குண்டூரில்தான்” என்றார்.
பிபிசி ஆவணப் படகுழுவைச் சேர்ந்த பிரான்சிஸ் கூறும்போது, “அவர்களின் வெளிப்படையான வர்த்தகம் எங்களை மிகவும் ஈர்த்துள்ளது. அத்துடன் இங்கு வரும் விவசாயிகளுக்கு அவர்கள் செய்து தந்துள்ள வசதிகளும் மிகவும் பாராட்டுக்குறியது” என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT